கண்டியில் யுக்திய சுற்றிவளைப்பில் ஆயுதங்களுடன் 3 சந்தேகநபர்கள் கைது
கண்டி - கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புப்புரஸ்ஸ பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த மூவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது, கம்பளை விஷேட அதிரடிப்படை அதிகாரிகளால் நேற்று இரவு (30.03.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கண்டி - கலஹா பகுதியில் திடீரென மேற்கொள்ளப்பட்ட யுக்திய சுற்றிவளைப்பு கீழ் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதன்போது, அனுமதி பத்திரம் இல்லாமல் வைத்திருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகள் முச்சக்கரவண்டி ஆகியவற்றை இதன்போது விசேட அதிரடி படையினர் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் கலஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri