கொழும்பில் பிரமாண்டமாக நடைபெற்ற திருமண நிகழ்வு - மணமக்களுக்கு கோவிட் தொற்று
கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளையில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற திருமண நிகழ்வில் இணைந்த தம்பதிக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.
திருமணம் முடிந்தவுடன் வெளிநாடு செல்வதற்காக மணமகன் மேற்கொண்ட PCR பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதியாகியுள்ளது. இதன் பின்னர் மணமகளுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மணமகன் மற்றும் மணமகளுக்கு கொரோனா தொற்றியமையினால் அவர்களின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும் கோவிட் தொற்று ஏற்பட்டிருக்கலாம் அச்சம் வெளியிடப்பட்டுள்ளத.
அதற்கமைய திருமண நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் PCR பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட 150 பேரின் விலாசம் உள்ளிட்ட தகவல்களை பெற்றுக்கொண்ட சுகாதார அதிகாரிகள் அவர்களுக்கு தெளிவுப்படுத்திய நிலையில் PCR பரிசோதனைக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri