நாட்டில் மேலும் 35 கோவிட் மரணங்கள் பதிவு
நாட்டில் மேலும் 35 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுடன் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (09-10-2021) நாட்டில் 35 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. இதில் 18 ஆண்களும் 17 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
30 வயதுக்கும் குறைந்த ஒரு மரணமும், 30 முதல் 59 வயது வரையிலான வயது பிரிவில் 4 மரணங்களும் 60 வயதுக்கும் மேற்பட்ட 30 மரணங்களும் பதிவாகியுள்ளன.
இதன்படி நாட்டில் மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 13304 ஆக உயர்வடைந்துள்ளது.
கடந்த சில தினங்களாகவே கோவிட் மரணங்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.