சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி
கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் ஒருநாளுக்கான சுற்றுலாப்பயணிகளின் வருகை சராசரி 5,000லிருந்து 3,782 ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
எனினும், இலங்கைக்கு வருகைத் தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையானது இம்மாத இறுதிக்குள் 1 இலட்சத்தை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இம்மாதத்தில் இறுதிக்குள் சராசரியாக சுற்றுலாப்பயணிகளின் வகையானது 120,934 தொடக்கம் 131,112 வரை அமையலாம் எனவும் கூறப்படுகிறது.
சுற்றுலா வீசா
இதன்படி இம்மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் 79, 431 பேர் சுற்றுலா வீசா மூலம் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.
மேலும் கடந்த ஆண்டு மே மாதத்தின் முதல் 3 வாரங்களில் 83,309 பேர் வருகை தந்துள்ளாதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தரவுகளின் படி இந்தியாவிலிருந்தே அதிகபட்ச சுற்றுலா பயணிகள்(26சதவீதம்) வருகை தந்துள்ள நிலையில், இரண்டாமிடத்தில் மாலைதீவுகளிலிருந்து 11 சதவீதமானோர் வருகை தந்துள்ளனர்.
மேலும், சர்வதேச தரப்பில் காணப்படும் விசா(Visa) பிரச்சினையும் இம்மாத வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கலாமெனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
