புத்தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட கொம்பன் யானை
புத்தளம் - ஆனமடுவ, செம்புவெவ பகுதியில் கொம்பன் யானையொன்று உயிரிழந்த நிலையில் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்த யானை இன்றையதினம் (02.09.2023) மீட்கப்பட்டுள்ளது.
யானை சடலமாக இருந்ததை அவதானித்த பிரதேச மக்கள், புத்தளம் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
உயிரிழந்த கொம்பன் யானை
இதன்போது கொம்பன் யானையின் தும்பிக்கை மின்சார வேலியில் சிக்குண்டதினால் யானை உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த கொம்பன் யானை 40 வயதுடையது எனவும் 9 அடி உயரம் மற்றும் அதன் தந்தம் 2 அரை அடி நீளம் எனவும் வனஜீவராசிகள் திணைக்கள கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த உயிரிழந்த யானைக்கு உடற்கூற்று பரிசோதனை முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam
