கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது
திருடப்பட்ட இத்தாலிய கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற ஈரான் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை இன்று (16.10.2024) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
40 வயதான ஈரானிய நபர் இன்று அதிகாலை 4:25 மணியளவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷார்ஜாவில் இருந்து G9-502 ஏர் அரேபியா விமானம் மூலமாக நாட்டை வந்தடைந்துள்ளார்.
ஒன்-அரைவல் விசா
நாட்டை வந்தடைந்த அவர், ஒன்-அரைவல் விசாவைப் பெறுவதற்காக, குடிவரவு அதிகாரிகளிடம் இத்தாலிய கடவுச்சீட்டை வழங்கியுள்ளார்.

இதன்போது, மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் குறித்த கடவுச் சீட்டு திருடப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, ஈரானிய பிரஜை இலங்கையை ஐரோப்பாவிற்கு செல்லும் வழித்தடமாக பயன்படுத்த திட்டமிட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
திருடப்பட்ட இத்தாலிய கடவுச்சீட்டு
மேலும், திருடப்பட்ட இத்தாலிய கடவுச்சீட்டு மேலதிக தொழில்நுட்ப சோதனைகளுக்காக குடிவரவுத் திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு அனுப்பப்பட்டது.

இது தொடர்பான விசாரணைகள் விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
கடந்த வாரம் டாப் இடத்தில் வந்த அய்யனார் துணை இந்த வார நிலைமை... டாப் சீரியல்களின் டிஆர்பி விவரம் Cineulagam
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam