சுரேஷ் சலேவிடமிருந்து 600 பக்க இரகசிய அறிக்கை..! வெளிச்சத்துக்கு வந்துள்ள வெளிவராத பல இரகசிய தகவல்கள்
ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள ரிட் மனுவுடன் தொடர்புடைய 600 பக்கங்களுக்கு மேற்பட்ட முக்கியமான மேலதிக ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை அவரது சட்டத்தரணிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
தற்போது உடல்நலக்குறைவால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அவரின் மனு எதிர்வரும் ஜூலை 10ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் இந்த ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
வெளிவராத பல இரகசிய தகவல்கள்
இந்த புதிய ஆவணங்களின் மூலம் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகள் மற்றும் அக்காலகட்டத்தில் சிஐடி மூத்த அதிகாரிகள் செயல்பட்ட விதம் தொடர்பாக இதுவரை வெளிவராத பல இரகசிய தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுரேஷ் சலேயின் சட்டத்தரணிகள் கூறுவதாவது, நீதிபதி ஜனக டி சில்வா தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் விசாரணை அதிகாரிகள் மற்றும் முக்கிய சாட்சிகள் வழங்கிய பல சத்தியப்பிரமாணங்கள் இந்த 600 பக்க ஆவணங்களில் இடம்பெற்றுள்ளன.
அவற்றின் மூலம் தாக்குதலுக்கு நேரடியாகப் பொறுப்பானவர்கள் யார் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அப்போது சிஐடியில் பணியாற்றிய சில மூத்த அதிகாரிகள் விசாரணைகளை திட்டமிட்டு புறக்கணித்ததும், கடமையில் பாரிய அலட்சியம் காட்டியதும் உறுதிப்படுத்தப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், கர்தினால் மல்கம் ரஞ்சித் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் வழங்கிய விசேட சாட்சியமும் இந்த ஆவணங்களில் இணைக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் எந்தவித அரசியல் தலையீடும் இன்றி சுயாதீனமாக நடைபெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்த நிலையில், தற்போதைய அரசியல் மற்றும் சமூக சூழலில் அந்த சுயாதீனக் கொள்கை முற்றிலும் சீர்குலைந்துள்ளதாக மனுதாரர் சுரேஷ் சலே நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.
இதற்கிடையில், சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள இந்த சட்ட நடவடிக்கை தனிப்பட்ட மனுவாக மட்டுமல்லாமல், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக மாறியுள்ளது.

இந்த வழக்கில் தலையீடு செய்து கருத்து முன்வைக்க பல சிவில் அமைப்புகள், தேசிய அமைப்புகள் மற்றும் மகா சங்கத்தினர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடைக்கால மனுக்களை தாக்கல் செய்து அனுமதி கோரியுள்ளனர்.
அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம், உலகளாவிய இலங்கை மன்றம், தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி உள்ளிட்ட அமைப்புகளும், திம்புலாகல, கங்கொடவில, களனி மற்றும் மாலபே ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பல பௌத்த தேரர்களும் வழக்கில் தலையீடு செய்ய அனுமதி கோரியுள்ளனர்.
அதன்படி, இந்த ரிட் மனு ஜூலை 10, வெள்ளிக்கிழமை அன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது, பிரதான மனுவுடன், இந்த அனைத்து தேசிய அமைப்புகள் மற்றும் மகா சங்கத்தால் தாக்கல் செய்யப்பட்ட உப மனுக்களையும் நீதிமன்றம் பரிசீலிக்க உள்ளது.
YOU MAY LIKE THIS VIDEO
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 19 மணி நேரம் முன்
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri