கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 4 வயது சிறுவன்
மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துனைச்சேனை பிரதேசத்தில் கிணற்றில் இருந்து 4 வயது சிறுவன் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பிறைந்துனைச்சேனையைச் சேர்ந்த முகமட் நபீர் முகமட் ஹாபீர் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீட்டில் பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த சிறுவன் நேற்று இரவு 11 மணிக்கு பின்னர் காணாமல் போயுள்ளதாகவும் நீண்ட நேரம் தேடிப்பார்த்த நிலையில் கிணற்றில் உயிரிழந்த நிலையில் சிறுவன் இருந்துள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு தடவியல் பிரிவு வரவழைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக
விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam