அதிகளவான கோவிட் தொற்றாளர்கள் கட்டுநாயக்கவில் அடையாளம்
கட்டுநாயக்க பிரதேசத்தில் இன்றைய தினம் 93 கோவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க - சீதுவை பிரதேசத்தில் 61 தொற்றாளர்கள் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் இந்த பிரதேசத்தில் இதுவரை மொத்தமாக 2 ஆயிரத்து 327 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள தொழிற்சாலைகளில் சேவையாற்றும் 32 ஊழியர்களுக்கு கோவிட் தொற்றியுள்ளது.
இதனடிப்படையில் சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள 64 தொழிற்சாலைகளில் பணிப்புரியும் 2 ஆயிரத்து 235 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை கம்பஹா மாவட்டத்தில் மொத்தமாக இன்றைய தினம் 537 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இவர்களில் 80 பேர் திவுலப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.