அம்பாறையில் சிறுமி மீது அத்துமீறல்: 69 வயது நபர் கைது
அம்பாறை - வீரமுனை பகுதியில் 9 வயது சிறுமியை அத்துமீறல் செயற்பாட்டுக்கு உள்ளாக்கிய நபரெருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அதிர்ஷ்டஇலாப சீட்டு விற்பனை செய்யும் 69 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்விடயம் குறித்து சிறுமியின் தாயார் முறைப்பாடு ஒன்றை சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்டிருந்தார்.
அதிர்ஷ்ட இலாப சீட்டு
குறித்த முறைப்பாட்டிற்கமைய அதிர்ஷ்ட இலாப சீட்டு விற்பனை செய்யும் நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வீரமுனை பகுதியில் வாடகை வீட்டில் தங்கி அதிர்ஷ்ட இலாப சீட்டு (லொத்தர் டிக்கெட்) விற்பனை செய்பவர் எனவும் அம்பாறை பகுதியை சேர்ந்தவர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam
