திருகோணமலையில் கோவிட் தொற்றின் காரணமாக இதுவரை 9 கிராமங்கள் முழுமையாக முடக்கம்
திருகோணமலையில் அதிகரித்துவரும் கோவிட் தொற்றின் காரணமாக இதுவரை 9 கிராமங்கள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன.
முதலாவதாக முடக்கப்பட்ட பூம்புகார் கிராமத்தைத் தொடர்ந்து அதனுடன் தரை வழித் தொடர்புடைய கோவிலடி கிராம சேவகர் பிரிவு மற்றும் மட்கோ கிராம சேவகர் பிரிவு மற்றும் இலிங்க நகர் கிராம சேவகர் பிரிவு ஆகியன உள்ளடங்கலாக 7க்கும் மேற்பட்ட கிராமங்கள் முடக்கப்பட்டன.
அத்துடன் மே 1 ஆம் திகதி மாலை முதல் அன்புவழிபுரம் கிராம சேவகர் பிரிவு மற்றும் உவர்மலை கிராம சேவகர் பிரிவு என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தக் கிராமங்களைச் சேர்ந்த மக்களின் அத்தியாவசிய தேவைகள் இன்னும் சிக்கலுக்கு உள்ளாகாமல் சுகாதார திணைக்களமும், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
தொற்றுக்குள்ளாகி முடக்கப்பட்ட பகுதிகளைத் தவிர ஏனைய பகுதிகளில் உள்ள மக்கள் தமது இயல்பு வாழ்க்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல கிராமங்களில் அன்டிஜன் பரிசோதனை மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் 523 பேர் தொற்றுக்கு உள்ளாகியதாகத் தகவல்கள்
வெளியாகியுள்ளன. கடந்த 30 ஆம் திகதி கந்தசாமி கோயில் பகுதியில் ஒரு கோவிட்
மரணம் பதிவாகியுள்ளது.