இளைஞர் சீர்திருத்த நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற 9 பேர் கைது!
பதுளை - தல்தெனை இளைஞர் சீர்திருத்த நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற 9 கைதிகளைக் கைது செய்துள்ளதாகச் சீர்திருத்த நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (17.042023) அதிகாலை தப்பிச் சென்ற 9 கைதிகளில், 4 பேர் நேற்றைய தினமே கைது செய்துள்ளதாகவும் எஞ்சிய 5 பேர் இன்றைய தினம் (18.04.2023) கைது செய்யப்பட்டனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தப்பிச் சென்றவர்கள் 23, 24, 25, 26 வயதுடைய இளைஞர்கள் என்றும் இவ்வாறு போதைப்பொருள் குற்றங்களுக்காகச் சிறைத்தண்டனை பெற்றவர்கள் எனவும் சிறைச்சாலைப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.
போதைப்பொருள் பாவனை
மேற்படி, இளைஞர்கள் இன்றைய தினம் (18.04.2023) பதுளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சீர்திருத்த நிலையத்தில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்
கீழ் 376 இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த இளைஞர்
சீர்திருத்த நிலையத்தில் 48 உத்தியோகத்தர்கள் மட்டுமே இங்குக் கடமையாற்றுகின்றமை
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



