புதுக்குடியிருப்பில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட 9 பேர் கைது
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சட்டவிரோத மணல்,கிரவல் மற்றும் கசிப்பு உற்பத்தி போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்ட 9 பேரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்றிரவு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கேரத் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது சட்டவிரோத கசிப்பு மற்றும் சட்டவிரோதமாக மணல் கொண்டு சென்றவர்கள் என 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை மன்னாகண்டல் பகுதியில் அகழ்வில் ஈடுபட்டட மூவரும் அவர்களின் வாகனங்களும் சிறப்பு அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
அனுமதியற்ற முறையில் கிரவல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு டிப்பர்களும் அதன் சாரதியும், கனரக இயந்திரம் ஒன்றும் அதன் சாரதியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது முறைகேடான அனுமதிப்பத்திரம் பயன்படுத்தி மணல் ஏற்றி சென்ற 4 டிப்பர்களும் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் மேற்கொள்ளப்பட்ட வீதிச்சோதனை நடவடிக்கையின் போது நான்கு டிப்பர்களும் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேவிபுரம் ஆற்றுப்பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நிலையம் ஒன்றும், புதுக்குடியிருப்பு பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவரர்களிடம் இருந்து 80 லீற்றர் கசிப்பும் 859 லீற்றர் கோடாவும் மற்றும் கசிப்பு காச்சுவதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த உபகரணங்களும் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட அனைத்து சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட 9 பேரும்
கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், இவர்கள் மீதான
சான்றுப்பொருட்கள் எதிர்வரும் 28.02.2022 திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதவான்
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
