வெளிநாடொன்றில் துப்பாக்கிச் சூடு! 9 பேர் பலி: பலர் காயம்
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் பகுதியில் உள்ள மதுபானக் கடை அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவமானது இன்று(21.12.2025) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, இந்த துப்பாக்கிச் சூட்டில் பத்து பேர் காயமடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
துப்பாக்கிச் சூடு
இரண்டு கார்களில் வந்த சுமார் 12 பேர் கொண்ட அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி குழு துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் சந்தேநபர்களைக் கைது செய்ய அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, தென்னாப்பிரிக்கா உலகிலேயே அதிக கொலை விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri