9 பில்லியன் ரூபா பெறுமதியான சிகரட்டுக்கள் சுங்கப்பிரிவினரால் மீட்பு
சுமார் ஒன்பது பில்லியன் ரூபா பெறுமதியான இருநூறு மில்லியன் சிகரட்டுக்களை சுங்கப்பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
மீள் ஏற்றுமதி செய்யும் நோக்கில் இந்த சிகரட்டுகள் இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 21 கொள்கலன்களில் இந்த சிகரட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
முன்னணி தேயிலை ஏற்றுமதி நிறுவனமொன்றின் பெயரில் இந்த சிகரட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இதற்கு முன்னர் குறித்த சந்தேக நபர் 12 கொள்கலன்களை பெல்ஜியம், நெதர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளுக்கு மீள் ஏற்றுமதி செய்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சர்வதேச ரீதியில் இந்த சட்டவிரோத ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் இடம்பெற்றுள்ளதாக சுங்கப் பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த விடயம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.