மன்னார் நகர சபையின் 8ஆவது அமர்வு - கருத்துக்களுடன் மோதிக்கொண்ட தவிசாளர்கள்

Mannar Northern Province of Sri Lanka
By Ashik Jan 23, 2026 05:34 AM GMT
Report

மன்னார் நகர சபையின் 8ஆவது மாதாந்த அமர்வு நேற்றையதினம்(22.01.2026) காலை 10 மணியளவில் நகர சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்ற போது நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன் மற்றும் முன்னாள் தவிசாளருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

மன்னார் நகர சபையின் 8ஆவது மாதாந்த அமர்வு நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன் தலைமையில் இடம்பெற்றது.

ஆட்பதிவுத் திணைக்களத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் - அதிகாரிகளின் மோசமான செயல்

ஆட்பதிவுத் திணைக்களத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் - அதிகாரிகளின் மோசமான செயல்

தற்போதைய நிர்வாகம் உரிய பதிலை வழங்கவில்லை

இதன்போது தலைமை உரை நிகழ்த்திய நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன் நகர சபை உறுப்பினரான சிறிலங்கா தொழிலாளர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சேவியர் ஜோன் பொலின்டன் வகித்த மன்னார் நகர சபை உறுப்பினர் பதவி நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி பத்திரிகை அறிவிப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக மன்னார் தேர்தல் திணைக்களத்தினால் எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.என தெரிவித்து தனது உரையை தொடர்ந்தார்.

மன்னார் நகர சபையின் சைனா பஜார் கடைகளை குத்தகைக்கு வழங்கிய போது ஏற்பட்ட மோசடி குறித்தும் சுமார் 4 கோடியே 50 லட்சம் ரூபாய் இழப்பு நகர சபைக்கு ஏற்பட்டுள்ளமை குறித்து தேசிய கணக்காய்வு அலுவலகம் சமர்ப்பித்த அறிக்கை குறித்து சபையில் தெரிவித்தார்.


இதன்போது குறித்த விடயம் தொடர்பாக மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளரும், தற்போதைய உறுப்பினருமான ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் கருத்து தெரிவித்ததோடு,மோசடிகள் எவையும் இடம்பெறவில்லை என்றும் தற்போதைய நிர்வாகம் உரிய பதிலை வழங்கவில்லை என்று தெரிவித்தார்.

மேலும் மன்னார் நகர சபையில் தவிசாளருக்கும் முன்னாள் தவிசாளருக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது.

இதன் போது மன்னார் நகரசபைக்கு 4 கோடி 50 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டமைக்கு சபையின் முன்னாள் தவிசாளர் மற்றும் நிர்வாகமே காரணம் என தவிசாளர் தெரிவித்தார்.

மன்னார் நகர சபையின் 8ஆவது அமர்வு - கருத்துக்களுடன் மோதிக்கொண்ட தவிசாளர்கள் | 8Th Session Mannar Urban Council Clash Opinions  

தரமுயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை

இதற்கு பதில் வழங்கிய முன்னாள் தவிசாளரும்,நகரசபை உறுப்பினருமான ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தற்போதைய தவிசாளர் கடந்த காலங்களில் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாகவும், இவரால் கடலில் மூழ்கடிக்கப்பட்ட பலர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனால் இருவருக்கும் இடையில் நீண்ட நேரம் கருத்து முறண்பாடு ஏற்பட்டதோடு சபையில் அமளி துமளி ஏற்பட்டது.குறித்த இருவருக்கும் நீண்ட நேரமாக வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

மன்னார் நகர சபையின் 8ஆவது அமர்வு - கருத்துக்களுடன் மோதிக்கொண்ட தவிசாளர்கள் | 8Th Session Mannar Urban Council Clash Opinions

தொடர்ந்து கருத்து தெரிவித்த நகர சபை பெண் உறுப்பினர்கள் தாங்கள் அரசியலில் வருவதை விரும்பாத சிலர் போலி முக நூல்களில் எமக்கு எதிரான பிரசாரங்கள் முன் வைத்து வருவதாகவும் இவ்விடயம் தொடர்பாக அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்த போது சில உறுப்பினர்கள் குறித்த பெண் உறுப்பினர்கள் மூவரையும் கதைக்க விடாது தொடர்ந்து மாற்று கருத்தை முன் வைத்து வந்தனர்.

மேலும் மன்னார் நகர சபையினால் மூர்வீதி பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள கடையில் முன்னெடுக்கப்பட்ட இறைச்சிக்கடை உரிய நபருக்கு வழங்கப்படாமை குறித்து சர்ச்சை ஏற்பட்டது.

இதன் போது ஒப்பந்ததாரருக்கு வழங்கப்படாமைக்கான காரணம் தொடர்பாகவும்,பள்ளி நிர்வாகத்தால் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பாகவும் தவிசாளரினால் விளக்கமளிக்கப்பட்டது.

சபை அமர்வுகள் முடிவதற்கு முன்னர் நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மற்றும் அவரது கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஒருவரும் சபை அமர்வில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இறுதியாக நகரசபையின் உப தவிசாளர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை யை மத்திய அரசின் கீழ் கொண்டு வந்து தரமுயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு - மேலும் ஒருவர் கைது

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு - மேலும் ஒருவர் கைது

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US