இலங்கை மின்சார சபைக்கு 8 கோடி ரூபாய் நட்டம்
சட்டவிரோதமான முறையில் மின்சாரம் கொள்வனவு செய்தமையால் 08 மாதங்களில் சுமார் 08 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
சிலர் மின்சார மானியை மாற்றியமைத்ததாலும், பல்வேறு சாதனங்களை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாலும் இது தொடர்பான இழப்பு ஏற்பட்டுள்ளதாக சபை குறிப்பிடுகிறது.
நிதி இழப்பு
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை மின்சாரத்தை அவ்வாறான முறையில் பெற்றுக் கொண்டதனால் மின்சார சபைக்கு 7 கோடியே 90இலட்சத்து 74,857 ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 8 மாதங்களில், மின் மீட்டர் மாற்றம் தொடர்பாக 1,041 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் இலங்கை மின்சார சபைக்கு 7 கோடிக்கு மேல் நட்டம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதற்கு மேலதிகமாக மின் கம்பிகளில் பல்வேறு சாதனங்கள் பொருத்தப்பட்டமை தொடர்பில் 81 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதில் 26 இலச்சத்து 45,207 ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
குறித்த நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர் அவர்களிடமிருந்து 36 இலட்சத்து 95 ஆயிரத்து 500 ரூபா அறவிடப்பட்டுள்ளது.





ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri
