வவுனியாவில் தடுப்பூசி செலுத்தாத 89 வீதமானவர்கள் கோவிட் தொற்றால் மரணம்
வவுனியாவில் கோவிட் தொற்று காரணமாக மரணமடைந்தவர்களில் 89.25 வீதமானவர்கள் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் என சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் கோவிட் தொற்று பரவல் தொடர்ந்தும் இருந்து வரும் நிலையில், இறப்புக்களும் தொடர்கின்றன.
இந்த நிலையை கருத்திற்கொண்டு மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக வீடுகளில் இருப்பதன் மூலமே நிலமையை கட்டுக்குள் கொண்டு வரமுடியும்.
வவுனியா மாவட்டத்தில் கோவிட் தொற்று காரணமாக ஏற்பட்ட மரணங்களில் 89.25 வீதமானவர்கள் கோவிட் தொடர்பான எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாதவர்கள்.
10.75 வீதமானவர்கள் தடுப்பூசியின் ஒரு டோஸை மட்டும் பெற்றுக்கொண்டவர்கள். தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்ட எவரும் இதுவரை வவுனியாவில் கோவிட் காரணமாக மரணிக்கவில்லை.
எனவே, 20 வயதிற்கு மேற்பட்டோர் கோவிட் தடுப்பூசிகளைப் பெற்று உங்கள் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri