இரண்டாம் டோஸ் தடுப்பூசி வழங்கலுக்காக வவுனியாவிற்கு 81 ஆயிரம் தடுப்பூசிகள்
இரண்டாம் டோஸ் தடுப்பூசி வழங்குவதற்காக வவுனியா மாவட்டத்திற்கு 81 ஆயிரம் தடுப்பூசிகள் வருகின்றன என மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தின் தடுப்பூசி வழங்கல் குறித்து இன்று (05.09) கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டத்தில் இரண்டாம் டோஸ் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காகக் கொழும்பிலிருந்து 81 ஆயிரம் தடுப்பூசிகள் வவுனியாவிற்கு வருகின்றன. செவ்வாய்க் கிழமையிலிருந்து தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை துரித கதியில் சுகாதாரத்துறையினர் ஊடாக இடம்பெறும்.
வவுனியா மாவட்டத்தில் கோவிட் பாதிப்புக்குள்ளாகுவோரில் 60 வயதிற்கு மேற்பட்டோர் அதிகமாகவுள்ளமையால் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதல் கட்டமாக இரண்டாம் டோஸ் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதுடன், இதுவரை தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளாத 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதலாவது டோஸ் தடுப்பூசியும் வழங்கப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அந்த அந்த கிராம அலுவலர் பிரிவுகள் ஊடாக தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், ஆசிரியர்களுக்கான தடுப்பூசிகளும் வழங்கப்படவுள்ளன.
எனவே மக்கள் தாமாக முன்வந்து அரசாங்கத்தால் வழங்கப்படும் தடுப்பூசிகளைப் பெற்று கோவிட் தொற்றிலிருந்து பாதுகாப்பைப் பெற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri
