அமைச்சர் லொஹானுக்கு எதிராக 8 கைதிகள் உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல்
சிறைச்சாலைகள் முகாமைத்துவ முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவிற்கு எதிராக எட்டு கைதிகள் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் இவ்வாறு மனு தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த 12ம் திகதி ராஜாங்க அமைச்சர் கைதிகளை அச்சுறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தம்மை வட மாகாண சிறைச்சாலை ஒன்றுக்கு மாற்றுமாறும் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் கைதிகள் கோரியுள்ளனர்.
அமைச்சர் லொஹான் குடிபோதையில் தங்களை அச்சுறுத்தியதாகவும், சுட்டுக் கொலை செய்யும் விடுதலை செய்யும் கூடிய அதிகாரத்தை ஜனாதிபதி தம்மிடம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு கைதிக்கும் எதிரான குற்றச்சாட்டுக்களைக் கேட்டறிந்து கொண்டு அவர்களைக் கடுமையாகத் திட்டியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, நீதி அமைச்சர் அலி சாப்ரீ உள்ளிட்ட சிலர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் - கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல்.... 200 கி.மீ நீள கால்வாய்: தண்டிக்க திட்டமிடும் இந்தியா News Lankasri
