கிளிநொச்சியில் சிறப்பு அதிரடிப் படையினர் சுற்றிவளைப்பு - பலர் கைது
கிளிநொச்சியில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பெண்ணொருவர் உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தருமபுரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்லாற்றுப் பகுதியில் கடந்த 4ஆம் திகதி இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலின் போது, பொது பாதுகாப்பு கடமைக்காக சென்ற பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
குறித்த சம்பவத்தில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்திருந்தனர்.
இதனையடுத்து குறித்த குற்றச்செயலுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நோக்கில் இன்றைய தினம் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தருமபுரம் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப் படையினர் இணைந்து மேற்கொண்ட குறித்த சுற்றிவளைப்பில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் அனுமதிப்பத்திரம் இன்றி பயணிக்க பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் 4 மற்றும் ஒரு வாள், இடியன் துப்பாக்கி ஒன்று, சட்டவிரோத கசிப்பு 18 லீற்றர் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண்ணொருவர் உள்ளிட்ட எட்டு பேரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விடயத்தை தருமபுரம் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சிசெர தெரிவித்துள்ளார்.





அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri
