இலங்கையில் மேலும் 8 பேர் கொரோனாவிற்கு பலி!
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 313 ஆக உயர்ந்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் எட்டு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, மூன்றாவது தொடர்ச்சியான நாளாக இன்றும் இலங்கையில் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 800ஐ தாண்டியது.
இன்று மாத்திரம் 848 கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து நாட்டின் கொரோனா தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 63ஆயிரத்து 293 ஆக உயர்ந்துள்ளது.
6703 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 56,277 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.


செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 9 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
