கிரிக்கட் வீரர் சசித்ர சேனாநாயக்கவிடம் 8 மணித்தியால விசாரணை
இலங்கை அணியின் கிரிக்கட் வீரர் சசித்ர சேனாநாயக்கவிடம் காவல்துறையினர் இன்று எட்டு மணித்தியாலங்கள் விசாரணை நடாத்தியுள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாகவும் இந்த சம்பவத்துடன் சசித்ர சேனாநாயக்கவிற்கு தொடர்பு உண்டு எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சசித்ர, முன்பிணை கோரி தாக்கல் செய்திருந்த மனு நேற்றைய தினம் நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மோசடிகளை தடுக்கும் விசேட காவல்துறை விளையாட்டு பிரிவினரால் இந்த விசாரணை நடாத்தப்பட்டுள்ளது.
சசித்ர சேனாநாயக்க இரண்டு வீரர்களிடம் ஆட்ட நிர்ணய சதி செய்யும் தோரணையில் பேசியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாளைய தினமும் சசித்ர சேனாநாயக்காவிடம் விசாரணை நடாத்தப்பட உள்ளது.
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
கப்பலை அனுப்புவதாக சொல்லவில்லை... ட்ரம்பின் பேச்சுக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்த ஸ்டார்மர் News Lankasri