கிரிக்கட் வீரர் சசித்ர சேனாநாயக்கவிடம் 8 மணித்தியால விசாரணை
இலங்கை அணியின் கிரிக்கட் வீரர் சசித்ர சேனாநாயக்கவிடம் காவல்துறையினர் இன்று எட்டு மணித்தியாலங்கள் விசாரணை நடாத்தியுள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாகவும் இந்த சம்பவத்துடன் சசித்ர சேனாநாயக்கவிற்கு தொடர்பு உண்டு எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சசித்ர, முன்பிணை கோரி தாக்கல் செய்திருந்த மனு நேற்றைய தினம் நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மோசடிகளை தடுக்கும் விசேட காவல்துறை விளையாட்டு பிரிவினரால் இந்த விசாரணை நடாத்தப்பட்டுள்ளது.
சசித்ர சேனாநாயக்க இரண்டு வீரர்களிடம் ஆட்ட நிர்ணய சதி செய்யும் தோரணையில் பேசியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாளைய தினமும் சசித்ர சேனாநாயக்காவிடம் விசாரணை நடாத்தப்பட உள்ளது.
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam