கிரிக்கட் வீரர் சசித்ர சேனாநாயக்கவிடம் 8 மணித்தியால விசாரணை
இலங்கை அணியின் கிரிக்கட் வீரர் சசித்ர சேனாநாயக்கவிடம் காவல்துறையினர் இன்று எட்டு மணித்தியாலங்கள் விசாரணை நடாத்தியுள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாகவும் இந்த சம்பவத்துடன் சசித்ர சேனாநாயக்கவிற்கு தொடர்பு உண்டு எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சசித்ர, முன்பிணை கோரி தாக்கல் செய்திருந்த மனு நேற்றைய தினம் நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மோசடிகளை தடுக்கும் விசேட காவல்துறை விளையாட்டு பிரிவினரால் இந்த விசாரணை நடாத்தப்பட்டுள்ளது.
சசித்ர சேனாநாயக்க இரண்டு வீரர்களிடம் ஆட்ட நிர்ணய சதி செய்யும் தோரணையில் பேசியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாளைய தினமும் சசித்ர சேனாநாயக்காவிடம் விசாரணை நடாத்தப்பட உள்ளது.
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri