கிரிக்கட் வீரர் சசித்ர சேனாநாயக்கவிடம் 8 மணித்தியால விசாரணை
இலங்கை அணியின் கிரிக்கட் வீரர் சசித்ர சேனாநாயக்கவிடம் காவல்துறையினர் இன்று எட்டு மணித்தியாலங்கள் விசாரணை நடாத்தியுள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாகவும் இந்த சம்பவத்துடன் சசித்ர சேனாநாயக்கவிற்கு தொடர்பு உண்டு எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சசித்ர, முன்பிணை கோரி தாக்கல் செய்திருந்த மனு நேற்றைய தினம் நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மோசடிகளை தடுக்கும் விசேட காவல்துறை விளையாட்டு பிரிவினரால் இந்த விசாரணை நடாத்தப்பட்டுள்ளது.
சசித்ர சேனாநாயக்க இரண்டு வீரர்களிடம் ஆட்ட நிர்ணய சதி செய்யும் தோரணையில் பேசியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாளைய தினமும் சசித்ர சேனாநாயக்காவிடம் விசாரணை நடாத்தப்பட உள்ளது.
குணசேகரன் ஜாமினுக்கு வந்த சிக்கல், செக் வைத்தது யார் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri