நெடுந்தீவு பிரதேசத்தில் 25000 ரூபா கொடுப்பனவுக்காக 778 வீடுகள் தெரிவு
நெடுந்தீவு பிரதேசத்தில் 25000 ரூபா கொடுப்பனவுக்காக 778 வீடுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவில் பதிவு செய்யப்பட்ட குடும்பங்களது எண்ணிக்கை 1410 எனவும், பதிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களது எண்ணிக்கை 4102 எனவும், மொத்த வீடுகளின் எண்ணிக்கை 1190 எனவும், டித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 1216 எனவும், 25000 ரூபா கொடுப்பனவுக்காக தெரிவு செய்யப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 778 எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டித்வா புயல் தொடர்பாக 2024/2025ஆம் ஆண்டுகளுக்கான புள்ளிவிபரக் கையேடுகளின்படி நெடுந்தீவு பிரதேச செயலாளரால் அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரியான தகவல்களை பெற முடியாத நிலை
அந்த அறிக்கையில் மேலும், உடனடியாக மேற்படி அனர்த்தம் இடம்பெற்ற காலத்தில் நெடுந்தீவு பிரதேசமானது சகல போக்குவரத்து மார்க்கங்களும் துண்டிக்கப்பட்டதுடன், மின்சாரம் மற்றும் சகல தொலைத்தொடர்பு வசதிகளும் துண்டிக்கப்பட்டது. இதனால் குறித்த நேரத்தில் வெள்ள இடரில் கிராமங்கள் தோறும் சென்று சரியான தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியாத நிலை காணப்பட்டது.

இதன்காரணமாக எமது புள்ளிவிபர தகவல்களின் அடிப்படையிலும், கடந்தகால அனர்த்த அனுபவங்களின் அடிப்படையிலும் மாவட்ட செயலகத்திற்கு தகவல் வழங்கப்பட்டது. இக்காலப்பகுதியில் நெடுந்தீவில் வசித்த குடும்பங்கள் அனைத்துமே சமூக பொருளாதார ரீதியான பாதிப்பிற்கு முகம்கொடுத்ததுடன் பாரிய பாதிப்பினையும் எதிர்கொண்டனர்.
கொடுப்பனவுகள் மற்றும் நிவாரணங்கள்
இதன் அடிப்படையிலேயே குறித்த தகவல் வழங்கப்பட்டது. தற்போது அனர்த்த நிவாரண சேவைகள் நிலைய சுற்றறிக்கைகளுக்கு ஏற்ப உரிய படிவங்களுக்கு அமைவாக பொருத்தமான உத்தியோகத்தர்களால் பெறப்படுகின்ற உறுதிப்படுத்தப்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மட்டுமே கொடுப்பனவுகள் மற்றும் நிவாரணங்கள் வழங்கப்படும் என்பதனை தயவுடன் அறியத்தருகின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் திறக்கப்படும் வான்கதவுகள்.. மட்டக்களப்பு உட்பட பல பகுதிகளில் நிரம்பிவழியும் நீர்த்தேக்கங்கள்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |