நாட்டில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!
கடந்த 7 ஆம் திகதி முதல் மாலை 6.00 மணி வரையான காலப்பகுதியில் மழை தொடர்பான அனர்த்தங்களால் 76,000 இற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அறிக்கையின்படி, குறித்த காலப்பகுதியில் 18,795 குடும்பங்களைச் சேர்ந்த 76,218 பேர் இடம்பெயர்ந்துள்ளதுடன் 233 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவாரண பணிகள்
38 நலன்புரி நிலையங்களில் 3,560 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பாதுகாப்பு படைகளின் பிரதானி அலுவலகத்தின் ஊடாக, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் அரச அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் நிவாரண பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 6 மணி நேரம் முன்

Optical illusion: படத்தில் "Z" எழுத்துக்கள் நடுவே மறைந்திருக்கும் இலக்கத்தை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

பிக் பாஸ் ஜாக்குலின் பிறந்தநாளை யாருடன், எப்படி கொண்டாடி உள்ளார் பாருங்க.. வைரல் புகைப்படம் Cineulagam
