மட்டக்களப்பு சிறைச்சாலையில் 72 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மொத்தமாக 116 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 2 பேர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.
இதன் அடைப்படையில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் 72 நபர்களும்,மட்டக்களப்பு சுகாதார பிரிவில் 15 நபர்களும் ,களுவாஞ்சிகுடி ,காத்தான்குடி,ஆரையம்பதி தலா ஒரு நபரும் கோரளைப்பற்று 10 நபர்களும், செங்கலடி 08 ,ஏறாவூர் 04 ,பட்டிப்பளை 02 ,2 பொலிஸார் உட்பட 116 பேருக்கு தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இன்றைய தினம் அதிக கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .
தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் அதிக தொற்று காரணமாக பல கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
