திருகோணமலையில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயன்ற 67 பேர் கைது (Video)
திருகோணமலை சாம்பல்தீவு, சல்லி பிரதேசத்தில் இருந்து வெளிநாடு ஒன்றுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவர்கள் எந்த நாட்டுக்கு செல்ல முயற்சித்தனர் என்று தகவல்கள் வெளியாகவில்லை.
கைது செய்யப்பட்டவர்களில் 7 பெண்கள், 3 சிறுவர்களும் உள்ளடங்கியுள்ளனர்.

இவர்கள், யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், அம்பாறை, இரத்தினபுரி, கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தின்போது, குறித்த பயணத்துக்காக பயன்படுத்தப்பட்ட 3 முச்சக்கரவண்டிகள், ஒரு கெப் வாகனம், ஒரு வேன் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
பொருளாதார சுமை காரணமாக ஏற்கனவே இலங்கையின் வடக்கில் இருந்து பலர் இந்தியாவுக்கு கடல் வழியாக சட்டவிரோமாக சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 3 மணி நேரம் முன்
சன் டிவியில் புனிதா, மணமகளே வா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... ரசிகர்கள் ஷாக் Cineulagam
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri