ஏணியிலிருந்து தவறி வீழ்ந்த 63 வயது பெண் உயிரிழப்பு
மாத்தளை, லக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரணமுரேகம பகுதியில் ஏணியிலிருந்து தவறி வீழ்ந்த பெண் ஒருவர், சிகிச்சை பலனின்றி நேற்று(26.04.2026) உயிரிழந்துள்ளார்.
அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் மேலதிக விசாரணை
இவர் ரணமுரேகம பகுதியில் தங்கியிருந்த போது, ஏணியொன்றின் உதவியுடன் வீட்டின் கூரை மீது ஏற முயற்சித்துள்ளார்.

இதன்போது, எதிர்பாராத விதமாக ஏணியிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளார்.
உடனடியாக மீட்கப்பட்ட அவர் லக்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவம் தொடர்பில் மரண விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், லக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 17 மணி நேரம் முன்
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri