ஏணியிலிருந்து தவறி வீழ்ந்த 63 வயது பெண் உயிரிழப்பு
மாத்தளை, லக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரணமுரேகம பகுதியில் ஏணியிலிருந்து தவறி வீழ்ந்த பெண் ஒருவர், சிகிச்சை பலனின்றி நேற்று(26.04.2026) உயிரிழந்துள்ளார்.
அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் மேலதிக விசாரணை
இவர் ரணமுரேகம பகுதியில் தங்கியிருந்த போது, ஏணியொன்றின் உதவியுடன் வீட்டின் கூரை மீது ஏற முயற்சித்துள்ளார்.

இதன்போது, எதிர்பாராத விதமாக ஏணியிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளார்.
உடனடியாக மீட்கப்பட்ட அவர் லக்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவம் தொடர்பில் மரண விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், லக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan