டெல்லியில் புறப்பட்ட போது தீப்பற்றி எரிந்த சுவிஸ் விமானம்! 6 பேர் படுகாயம்
டெல்லி விமான நிலையத்தில் புறப்படத் தயாராக இருந்த SWISS விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறினால் தீப்பற்றிய சம்பவத்தினால், அதில் பயணம் செய்த 6 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
6 பேர் காயம்
அனைத்து பயணிகளும் அவசர சறுக்குப் படிக்கட்டுகள் (emergency slides) மூலம் ஓடுபாதையில் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த விமானம் சுவிட்சர்லாந்தின் சூரிச்சிற்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது.
LX147 என்ற விமான எண் கொண்ட Airbus A330 வகை விமானம், அதிகாலை 1:08 மணியளவில் புறப்படத் தொடங்கியபோது, அதன் ஒரு இயந்திரம் செயலிழந்ததுடன் தீப்பற்றியதாக அதிகாரிகள் கூறினர்.
Emergency evacuation from Swiss Delhi - Zurich flight LX0147 pic.twitter.com/rvzhCPb3bg
— Ishan Jain (@JainIshan316) April 25, 2026
SWISS நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், டெல்லியில் LX147 விமானம் தொடர்பான சம்பவம் குறித்து எங்களுக்கு தகவல் உள்ளது. HB-JHK பதிவு எண் கொண்ட Airbus A330 விமானம் இது. இந்த விமானத்தில் 228 பயணிகளும், 4 குழந்தைகளும் இருந்தனர்.
சம்பவத்தை சமாளிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயந்திரத்தில் கோளாறு
மேலும், இந்திய நேரப்படி அதிகாலை 1 மணிக்குப் பிறகு, ஒரு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் புறப்படுவது ரத்து செய்யப்பட்டது.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, பயணிகள் வெளியேற்றப்பட்டனர். 6 பயணிகள் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். குழுவினருக்கு எந்த பாதிப்பும் இல்லை, என்று விமான நிறுவனம் தெரிவித்தது.

சமூக வலைதளங்களில் இந்த சம்பவத்தின் காட்சிகள் வெளியாகியுள்ளன. சறுக்குப் படிக்கட்டுகளை பயன்படுத்த முடியாத சிலருக்காக, படிக்கட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
தற்போது பயணிகளுக்கு உதவி வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு மாற்று விமான ஏற்பாடுகள் அல்லது ஹோட்டல் தங்குமிட வசதிகள் செய்து தரப்படுகின்றன.
பயணிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க, அவர்களுக்கு தொடர்பு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இது அனைவருக்கும் மன அழுத்தமான நிலை. எங்கள் குழுக்கள் நேரடியாக பயணிகளை கவனித்து வருகின்றன.
பயண வசதி
உள்ளூர் அதிகாரிகளுடன் நெருக்கமாக பணியாற்றுகிறோம்,” என்று SWISS தெரிவித்துள்ளது.
Emergency evacuation from Swiss Delhi - Zurich flight LX0147 pic.twitter.com/rvzhCPb3bg
— Ishan Jain (@JainIshan316) April 25, 2026
இந்த சம்பவத்திற்கான காரணத்தை முழுமையாக கண்டறிய நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தொழில்நுட்ப நிபுணர்கள் டெல்லிக்கு வந்து விமானத்தை ஆய்வு செய்ய உள்ளனர்.
“எங்கள் பயணிகளின் மற்றும் குழுவினரின் பாதுகாப்பே எங்களின் முதன்மை முன்னுரிமை. பயணிகளுக்கு விரைவான மாற்று பயண வசதிகளை ஏற்படுத்த தீவிரமாக பணியாற்றுகிறோம்,” என்று நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 8 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்! Manithan