சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது: வாகனங்களும் மீட்பு
மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வடமுனை மற்றும் ரிதிதென்னை பகுதியில் அனுமதிப்பத்திரங்களை மீறி உழவு இயந்திரம் மற்றும் கனரக வாகனங்களைப் பயன்படுத்தி மண் அகழ்வில் ஈடுபட்ட 6 பேரை விசேட அதிரடிப்படையின் கைது செய்ததுடன் 3 உழவு இயந்திரம், 3 கனரக வாகனங்களை மீட்டு ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வடமுனை ஊத்துச்சேனை பகுதியில் சம்பவதினமான நேற்று(23) விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் அனுமதிப்பத்திரத்தை மீறி உழவு இயந்திரத்தில் மணல் அகழ்வில் ஈடுபட்ட 3 பேரைக் கைது செய்ததுடன் 3 உழவு இயந்திரத்தை மீட்டனர்.
அதேவேளை ரிதிதென்னை பகுதியில் அனுமதிப்பத்திரத்தை மீறி கனரக வாகனத்தில் மணல் அகழ்வில் ஈடுபட்ட 3 பேரைக் கைது செய்ததுடன் 3 கனரக வாகனங்களை மீட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களையும். வாகனங்களையும் விசேட அதிரடிப்படையின் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இவர்களை நீதிமன்றில் முன்னிறுத்த நடவடிக்கை
எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam