இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலநடுக்கமானது இன்று (11) ரிக்டர் அளவுகோளில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு சுமத்ராவில் பிஞ்சாய் நகருக்கு 160 கி.மீ. மேற்கே 89 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம்
இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதம், பொருள் சேதம் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.
மேலும் நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்படக்கூடும் என்ற அபாய எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக இந்தோனேசியா அருகே 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |