இலங்கையில் 5G வலையமைப்பை நடைமுறைப்படுத்துவது குறித்து வெளியான தகவல்
தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனாவுக்கு பின்னர் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இலங்கையில் 5ஜி (5G) வலையமைப்பை பயன்படுத்துவது குறைந்தது ஒரு வருடமாவது தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெலிகொம் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி திருகுமார் நடராசாவின் கருத்துப்படி, 5ஜி நெட்வொர்க்கை (வலைமைப்பை)பயன்படுத்துவதற்கு 4ஜி நெட்வொர்க்கை பயன்படுத்துவதற்கான செலவை விட இரண்டு மடங்கு செலவாகும் என்று கூறியுள்ளார்.
எனவே தற்போது நாடு இருக்கும் நிலையில், இதனை நடைமுறைப்படுத்த குறைந்தது ஒரு வருடமாவது தாமதமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னர் 2ஜி மற்றும் 4ஜி வலையமைப்புக்கள் பெரிய விஷயமாகப் பேசப்பட்டன. இந்தநிலையில் 5ஜி என்பது அடிப்படையில் 4ஜியின் இன் மற்றொரு மேம்பட்ட பதிப்பாகும். இது நுகர்வோருக்கு அதிக திறனை வழங்குகிறது என்று திருக்குமார் நடராசா மேலும் தெரிவித்தார்.
நாட்டில் ஸ்மார்ட்போன் ஊடுருவல் அரிதாகவே, அதாவது 50 சதவீதமாகவே உள்ளது. மக்கள் தொகையில் பாதி பேருக்கு 3ஜி போன் கூட இல்லை இந்த நேரத்தில் 5ஜி நெட்வொர்க்(வலையமைப்பு) பயனுள்ளதா என்ற கேள்வியை எழுப்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
5ஜி கைபேசிகள் மிகவும் வரையறுக்கப்பட்ட மற்றும் விலை உயர்ந்தவையாகவும் உள்ளன. எனவே, 5ஜி கைபேசி மற்றும் சேவைகளைப் பயன்படுத்தக்கூடிய மக்களின் சதவீதமும் குறைவாகவே உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri