மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கூட்டுறவு நலன்பரி சங்கத்தில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி
மட்டக்களப்பு (Batticaloa) போதனா வைத்தியசாலை கூட்டுறவு நலன்புரி சங்கத்தில் கடந்த 5 வருடங்களாக இடம்பெற்றுள்ள 58,5853 ரூபா நிதி மோசடி தொடர்பில் விசேட நிதி மோசடி விசாரணை பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த கூட்டுறவு (சிக்கன) சங்கத்தின் புதிய நிர்வாகம் 2024ஆம் ஆண்டு பெறுப்பேற்றதையடுத்து நிதி தொடர்பாக ஆராய்ந்த போது நிதி மோசடி இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த காலப்பகுதியில் சங்கத்தின் பொருளாராக இருந்தவருக்கு எதிராக மாவட்ட விசேட நிதி மோசடி விசாரணை பிரிவு பொலிஸாருக்கு புதிய நிர்வாகம் முறைப்பாடு செய்த நிலையில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சந்தா பணம்
இதன்போது, இந்த சிக்கன நலன்புரி சங்கத்தில் வைத்தியசாலையில் கடமையாற்றும் சுமார் ஆயிரம் பேருக்கு மேலானோர் உறுப்பினர்களாக இருப்பதுடன் மாதாந்தம் சம்பளத்தில் ஆயிரம் ரூபாவை சந்தா பணமாக செலுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் ஆண் பரிசாதகர் ஒருவர், கூட்டுறவு நலன்புரி சங்கத்தில் பொருளாளராக பெறுப்பேற்று 2019ஆம் ஆண்டு தொடக்கம் 2023 வரையான காலப்பகுதி வரை கடமையாற்றி வந்துள்ளார்.
அத்துடன், சங்க நிர்வாகத்தில் கடமையாற்ற வைத்தியசாலை நிர்வாகத்திற்கு அப்பாற்பட்ட பெண் ஒருவர் நியமிக்கப்பட்டு மாதாந்த சம்பளத்துக்கு கடமைக்கு அமர்தப்பட்டுள்ளார்.
இதன்போது, பொருளாளர் சங்கத்தின் உறுப்பினர் பலரின் பெயரில், அவர்களுக்கே தெரியாமல் கடன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கடன் பெற்று பணத்தை மோசடி செய்து வந்துள்ளார்.
மீள கையளிப்பு
இவ்வாறு பொருளாளர் மற்றும் அவரது உதவிக்கு நியமித்த பெண் ஆகியோர் கடந்த 5 வருடங்களில் 58,5853 ரூபா நிதி மோசடி செய்துள்ளனர் என மாவட்ட விசேட நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட சங்கத்தின் முன்னாள் பொருளாளர் மோசடி செய்த பணத்தில் 39 இலட்சம் ரூபா பணத்தை திரும்ப ஒப்படைத்துள்ளதுடன் அவருடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்ட பெண் 19 இலட்சம் ரூபாவை இதுவரை ஒப்படைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறிருக்கையில், இந்த பாரிய நிதி மோசடி தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருவதுடன் இந்த மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்து, அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதேவேளை, வைத்தியசாலையில் இயங்கி வரும் இன்னொரு கூட்டுறவு சங்கத்தில் கோடிக்கணக்கான பண மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் கூட்டுறவு நலன்புரி சங்கத்தில் பொருளாளராக இருந்து மோசடி செய்தவர் அந்த சங்கத்தில் இருந்துள்ளதாகவும் சங்க யாப்பின்படி கடந்த ஜுலை மாதம் சங்க பொதுக் கூட்டம் கூட்ப்படவேண்டிய நிலையில் அதற்கான நடவடிக்கை இன்னமும் எடுக்கப்படாமல் இருப்பதாக சங்க உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தனுஷ் இல்லை, அசுரன் படத்தில் நான் நடித்திருக்கனும், விட்டுக்கொடுத்துட்டேன்.. சொன்னது யார் பாருங்க Cineulagam
கும்பத்தில் சனி, சூரியன் சேர்க்கை... இந்த 3 ராசியினர் ஜாக்கிரதை! எச்சரிக்கும் ஜோதிட நிபுணர்கள் Manithan