சுழிபுரத்தில் 55 கிலோகிராம் கஞ்சா மீட்பு
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் கிழக்குப் பகுதியிலிருந்து 55 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கஞ்சா பொதிகள் இன்று மீட்கப்பட்டுள்ளன.
குறித்த கஞ்சா பொதிகளாக கட்டப்பட்ட நிலையில் கடலில் உள்ள கட்டுமரம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இருப்பினும் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட கஞ்சா வட்டுக்கோட்டை பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளது.