ஜனாதிபதியின் உருவப்படத்துடன் 5000 ரூபாய் நாணயத்தாள்: சந்தேகநபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின்(Anura Kumara Dissanayake) உருவப்படத்துடன் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட 5,000 ரூபாய் தாள்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவருக்கு, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2024 நவம்பர் 11 ஆம் திகதி வரை குறித்த சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க கெஸ்பேவ நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமாரவின் உருவப்படத்துடன் கூடிய 5000 ரூபாய் போலி நாணயத் தாளின் புகைப்படத்தைப் பரப்பியதாக சந்தேகிக்கப்பட்டே, அவர் நவம்பர் 04 ஆம் திகதியன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.
பொலிஸ் விசாரணை
சந்தேக நபர், அதுருகிரிய, கொரத்தோட்டை பிரதேசத்தில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அத்துடன் அவர் விற்பனையாளராக பணிபுரிபவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri