இலங்கையை விட்டு தப்பிச் செல்லும் பெருமளவு மக்கள்
இலங்கையை விட்டு செல்பவர்களின் எண்ணிக்கை பாரிய அளவு அதிகரித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதுவரையில் வெளியான தகவல்களின் அடிப்படையில் வெளிநாடு செல்லும் நபர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 10 நாட்களில் 12 ஆயிரம் பேர் வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்கள் முழுவதும் பத்தரமுல்லையில் வெளிநாட்டு கடவுச்சீட்டு அலுவலகத்தில் நீண்ட வரிசை ஒன்றை காண முடிந்துள்ளது.
நீண்ட வரிசையில் காத்திருந்தவர்களில் அதிகமானோர் இளைஞர் யுவதிகள் என தெரியவந்துள்ளது.
அண்மைக்காலமாக இலங்கையில் வாழ்க்கை செலவு சடுதியாக அதிகரித்துள்ளது. அதேவேளை கொவிட் பரவல் காரணமாக இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பும் குறைவடைந்துள்ளன. இந்நிலையில் வேலைவாய்பை தேடி இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதாக தெரிய வருகிறது.
கும்பத்தில் சனி, சூரியன் சேர்க்கை... இந்த 3 ராசியினர் ஜாக்கிரதை! எச்சரிக்கும் ஜோதிட நிபுணர்கள் Manithan