மஸ்கெலியாவில் மண்ணுக்குள் புதைந்து போன ஐவர் காயங்களுடன் மீட்பு
மண்மேடொன்று சரிந்து விழுந்தத்தில், அதில் புதையுண்ட ஐவர் காயங்களுடன் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியில் பனியன் பாலத்திற்கு அருகில் உள்ள ஒரு வீட்டின் மீது இடிந்து விழுந்த மண் மேட்டின் கீழ் புதைந்திருந்த ஐந்து பேரை அப்பகுதி மக்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நேற்று(05) மஸ்கெலியா பகுதியில் பெய்த கனமழையால் வீடொன்றின் மீது பாரிய மண் திட்டு சரிந்து வீழ்ந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்தநிலையில் அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஐவர் மீது இன்று (06) மதியம் 12:00 மணியளவில் மற்றொரு மண் மேடு சரிந்து விழுந்துள்ளது.
பின்னர், மஸ்கெலியா வைத்தியசாலையின் வைத்தியர்களின் உதவியுடன், பொது மக்கள் இணைந்து மண் மேட்டின் கீழ் புதையுண்டிருந்த ஐவரையும் மீட்டு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஐவரின் நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும் அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும், சம்பவம் குறித்து மஸ்கெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


ரணில் ஆதரவாளரின் சர்ச்சைக்குரிய பதிவு! அநுர அரசின் அதிரடியால் சேமிக்கப்பட்ட 3 கோடிக்கு மேற்பட்ட பணம்
நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள பாதாள உலககும்பலின் நடவடிக்கைகள்! ஜிந்துப்பிட்டிய துப்பாக்கி சூட்டில் புதிய திருப்பம்
அமெரிக்க பேரரசின் வீழ்ச்சிக்கான அறிகுறி! இனிமேலும் நீங்கள் அதை செய்ய முடியாது.. அலி கமெனியின் பகிரங்க எச்சரிக்கை
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam