அவுஸ்திரேலியாவில் சுமார் பத்து மீற்றர் உயரத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு பலியான சிறுவர்கள்
அவுஸ்திரேலியாவில் குழந்தைகள் துள்ளி விளையாடும் Jumping Castle- இலிருந்து பள்ளிச்சிறுவர்கள் தூக்கி வீசப்பட்ட சம்பவத்தில் 5 சிறுவர்கள் பலியாகியுள்ளதுடன்,மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று டஸ்மேனியாவின் Devonport பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பள்ளியின் கடைசி நாளான இன்று மாணவ - மாணவிகளின் விடுமுறையையொட்டி பாடசாலையினால் ஒழுங்கு செய்யப்பட்ட விளையாட்டு நிகழ்விலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
திடீரென்று வீசிய கடும் காற்றினால் மேலே பறந்த Jumping Castle-இலிருந்து வெளியே வீசப்பட்ட மாணவர்கள் சுமார் பத்து மீற்றர் உயரத்திலிருந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் காயமடைந்த மாணவ - மாணவிகளை வைத்தியசாலைகளுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன்,மேலும் இரண்டு குழந்தைகள் ஹெலிக்கொப்டர் மூலம் மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri
உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரி விதிப்பு ரத்து: அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு News Lankasri
ரஜினிகாந்த் முதல் தமிழக முதல்வர் ஸ்டாலின் வரை.. நடிகர் மீசை ராஜேந்திரன் வீட்டு திருமணம்.. வீடியோ இதோ Cineulagam
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan