அவுஸ்திரேலியாவில் சுமார் பத்து மீற்றர் உயரத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு பலியான சிறுவர்கள்
அவுஸ்திரேலியாவில் குழந்தைகள் துள்ளி விளையாடும் Jumping Castle- இலிருந்து பள்ளிச்சிறுவர்கள் தூக்கி வீசப்பட்ட சம்பவத்தில் 5 சிறுவர்கள் பலியாகியுள்ளதுடன்,மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று டஸ்மேனியாவின் Devonport பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பள்ளியின் கடைசி நாளான இன்று மாணவ - மாணவிகளின் விடுமுறையையொட்டி பாடசாலையினால் ஒழுங்கு செய்யப்பட்ட விளையாட்டு நிகழ்விலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
திடீரென்று வீசிய கடும் காற்றினால் மேலே பறந்த Jumping Castle-இலிருந்து வெளியே வீசப்பட்ட மாணவர்கள் சுமார் பத்து மீற்றர் உயரத்திலிருந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் காயமடைந்த மாணவ - மாணவிகளை வைத்தியசாலைகளுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன்,மேலும் இரண்டு குழந்தைகள் ஹெலிக்கொப்டர் மூலம் மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam