ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு அடித்த அதிஷ்டம்
இலங்கையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு 5 நீல இரத்தினக்கற்கள் கிடைத்துள்ளன.
கதிர்காமம் - கொச்சிபத்தான பகுதியில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு இவ்வாறு அதிஷ்டம் அடித்துள்ளது.
கதிர்காமம் யாத்திரைக்கு செல்லுபவர்களுக்காக, பூசைத் தட்டுகளை விற்பனை செய்யும் மூன்று வர்த்தகர்களுக்கே, 5 நீல இரத்தினக்கற்கள் கிடைத்துள்ளன.
ஒரு கோடி ரூபாவுக்கு விற்பனை

கதிர்காமம்-கொச்சிபத்தான பகுதியில் அண்மைக் காலமாக, இரத்தினக்கல் தோண்டும் பணிகள் இடம்பெறுகின்றன.
இந்தநிலையில், மூன்று பேருக்கு 5 இரத்தினக்கற்கள் கிடைத்ததை அடுத்து, அந்த இடத்திற்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மூவருக்கும் கிடைத்த 5 இரத்தினக்கற்களும், எலஹர பிரதேசத்தில் உள்ள வர்த்தகர் ஒருவருக்கு, சுமார் ஒரு கோடி ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இரவு முழுவதும் விடிய விடிய கதறி அழுதுள்ள எதிர்நீச்சல் சீரியல் புகழ் ஹரிப்பிரியா... அப்படி என்ன நடந்தது? Cineulagam
பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் சீரியலில் அடுத்து என்ன? படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam