மட்டக்களப்பில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட ஐவர் கைது
மட்டக்களப்பு - ஏறாவூர், வாழைச்சேனை, வெல்லாவெளி ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஹெரோயின், கசிப்பு மற்றும் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் உள்ளிட்ட ஐவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் 19 வயதுடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதேவேளை வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியில் 4 கிராம் ஹெரோயினுடன் 41 வயதுடைய ஒருவரையும், வாழைச்சேனை சந்தியாறு பகுதியிலிருந்து 25 போத்தல் கசிப்பை எடுத்து வந்த வாகனேரி குளத்துமடு பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த இருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 12 மணி நேரம் முன்
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan