கலாபவனத்தில் இருந்து காணாமல் போன விலைமதிக்க முடியாத 47 ஓவியங்கள்
தேசிய கலைக்கூடமான கலாபவனத்தில் இருந்து விலை மதிக்க முடியாத 47 ஓவியங்கள் காணாமல் போயுள்ளதாக கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.
தேசிய கலைச்சுவடியான கலாபவனம் கடந்த காலத்தில் திருத்த வேலைகளுக்காக மூடப்பட்டிருந்த காலத்தில் அங்கு வைக்கப்பட்டிருந்த இலங்கையின் பிரபல ஓவியக் கலைஞர்களின் விலை மதிக்க முடியாத பல ஓவியங்கள் காணாமல் போய் அல்லது திருடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
நல்லாட்சிக் கால அமைச்சர் ஒருவரின்
அவ்வாறு காணாமல் போன ஓவியங்களில் சில ஓவியங்கள் நல்லாட்சிக் கால அமைச்சர் ஒருவரின் மைத்துனர் வசமும், இலங்கையின் பிரபல கசினோ வர்த்தகர் ஒருவர் வசமும் இருப்பதாக தற்போது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, குறித்த ஓவியங்களை மீட்டெடுப்பது தொடர்பான சட்ட நடவடிக்கைள் தற்போதைக்கு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
FIFA உலகக் கிண்ணம்... குழுச் சுற்றில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய ஆட்டங்கள் News Lankasri
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri