டிட்வா புயலின் பெரும் தாக்கம்: முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலவரம்

Mullaitivu Weather
By Shan Dec 01, 2025 07:05 AM GMT
Report

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் 

கனமழை காராணமாக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளது. நாடு முழுவதும் பெய்துவரும் கன மழையால் முல்லைத்தீவு மாவட்டம் வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையால் முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் முற்றிலும் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் ஆலய செயற்பாடுகள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்டம் முழுவதுமாக நான்காவது நாட்களை கடந்தும் மின்சாரம், தொலைபேசிகளுக்கான இணைப்பு சில பிரதேசங்களில் வழங்கப்படாதுள்ளதுடன், வழங்கப்பட்ட பிரதேசங்களிலும் ஒழுங்கான முறையில் இதுவரை சீர்செய்யப்படவில்லை. அத்திய அவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது இருளில் மூழ்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்தி - ஷான் 

புதிய இணைப்பு

அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகப்பெருமளவான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகப்பெருமளவான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 6 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 1550 குடும்பங்களை சேர்ந்த 4594 பேர் 42 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

டிட்வா புயலின் பெரும் தாக்கம்: முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலவரம் | 4594 People Affected Due To Rain In Mullaitivi

தொலைத்தொடர்பு வசதிகள் துண்டிப்பு

2000 த்திற்கு மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 5400 பேர் வரை உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் இருக்கின்றார்கள். இந்த கணக்கெடுப்பு முழுமையாக எடுக்கவில்லை காரணம் முல்லைத்தீவு மாவட்டம் முற்றாக தொலைத்தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

கடற்த 28ம்,29 ஆம் திகதிகளில் மின்னசாரம் தொலைத்தொடர்பு இல்லை (இன்று தான் (30) மின்சாரம் தொலைத்தொடர்புகள் சற்று சீர்செய்யப்பட்டு வருகின்றன) தற்போது தொலைத்தொடர்புவசதிகள் சீர்செய்யப்பட்டாலும் முழுமையாக தொலைத்தொடர்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 30ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 90ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள்இயல்புநிலை மிகமோசமாக பதிக்கப்பட்ட நிலையில், அவர்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

45ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் முற்றாக வெள்ள்தில் மூழ்கியுள்ளதால் அவை முற்றாக அழிவதற்கான வாய்ப்புக்கள் உள்ளாகியுள்ளது.

டிட்வா புயலின் பெரும் தாக்கம்: முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலவரம் | 4594 People Affected Due To Rain In Mullaitivi

வான்பாயும்  முக்கிய குளங்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் முக்கியமான குளங்கள் வான்பாய்கின்றன. முத்தையன்கட்டு,வவுனிக்குளம்,தண்ணிமுறிப்பு குளம்,வான்பாய்கின்றன. மிகமுக்கியமாக மக்களின் போக்குவரத்து பல இடங்களில் தடைப்பட்டுள்ளது.

குறிப்பாக கிளிநொச்சியில் இருந்து பரந்தன் ஊடான போக்குவரத்து முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் இரண்டு பாலங்கள் சேதமடைந்துள்ளது. நாயாறுபாலம் உடைந்துள்ளதால் இந்த வீதி ஊடாக கொக்குளாய்,வெலிஓயா போன்ற இடங்களுக்கு செல்லமுடியாத நிலை இருக்கின்றது.

இடம்பெயர்ந்து முகாம்களில் வசிப்பவர்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றது பல தரப்பினரின் ஒத்துளைப்புடன் வழங்கப்பட்டு வருகின்றது.

மின்சாரம் நேற்று (29) பிற்பகல் தொடர்கம் மின்சாரம் கிடைத்து வருகின்றது தொலைத்தொடர்பு வசதிகள் இதுவரை முழுமைபெறவில்லை.

டிட்வா புயலின் பெரும் தாக்கம்: முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலவரம் | 4594 People Affected Due To Rain In Mullaitivi

கடினமான மீட்பு நடவடிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக 23 விவசாயிகள் காணாமல்போன நிலையில் நேற்று (29) மாலை திரும்பியுள்ளனர். இருந்தும் நித்தகை குளம் புனரமைப்பிற்காக வேலைசெய்வதற்காக வந்த இருவர் தற்போதும் அந்த பிரதேசத்தில் வெள்ளத்தில் சூழ்ந்து இருக்கின்றார்கள் அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் கடினமாக இருக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் கமநல சேவைக்குட்பட்ட கோடாலிக்கல்லு குளம் முற்றுமுழுதாக சேதடைந்துள்ளதுடன் வட்டுவாகல் பாலத்தின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

நாயாறு பாலம் தற்காலிகமாக திருத்துவதற்கு நான்குவரையான நாட்கள் எடுக்கும் என வீதிஅபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது இருந்தாலும் நாயாறு பாலம் புதிதாக அமைக்கவேண்டிய தேவை உள்ளது.

வட்டுவாகல் பாலம் ஏற்கனவே புனரமைப்புபணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்த பாதையூடான போக்குவரத்து சில நாட்களில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

செய்தி - கீதன்

முதலாம் இணைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழை காரணமாக 1550 குடும்பங்களை சேர்ந்த 4594 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் (30) பிற்பகல் வெளியிடப்பட்ட மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான் பாயத் தொடங்கியுள்ளதுடன், இதனால் தாழ் நிலப்பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! அறிகுறிகளை கண்டால் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்

நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! அறிகுறிகளை கண்டால் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்

டிட்வா புயலின் பெரும் தாக்கம்: முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலவரம் | 4594 People Affected Due To Rain In Mullaitivi

முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலவரம்

இதன்காரணமாக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 315 குடும்பங்களை சேர்ந்த 930 நபரும், கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 125 குடும்பங்களை சேர்ந்த 362 நபரும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 372 குடும்பங்களை சேர்ந்த 1078 பேரும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 582 குடும்பங்களை சேர்ந்த 1826 பேரும், துணுக்காய் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 27 குடும்பங்களை சேர்ந்த 65 பேரும், வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 129 குடும்பங்களை சேர்ந்த 331 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக

குறித்த மக்கள் மீட்கப்பட்டு ஆறு பிரதேச செயலக பிரிவின் கீழுள்ள 42, இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ள நிலையில் யானைகள் கூட்டம் கூட்டமாக பயிர்களை சேதப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் வெள்ளத்தில். மூழ்கிய பயிர் நிலங்கள் மேலும் காட்டு யானைகளால் அழிவடையும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

படிப்படியாக குறைவடையும் களனி கங்கையின் நீர்மட்டம்.. கொழும்பில் தற்போதைய நிலவரம்

படிப்படியாக குறைவடையும் களனி கங்கையின் நீர்மட்டம்.. கொழும்பில் தற்போதைய நிலவரம்

இலங்கையை நிலைகுலையச் செய்துள்ள இயற்கை! மீட்பு பணியில் வெளிநாட்டவர்களும்..

இலங்கையை நிலைகுலையச் செய்துள்ள இயற்கை! மீட்பு பணியில் வெளிநாட்டவர்களும்..

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு 13

11 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொக்குவில் மேற்கு, சென்னை, India, வெள்ளவத்தை

15 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US