மிக உயர்ந்த மட்டத்தை எட்டிய நீர்மட்டம் - பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
களனி ஆற்றுப் படுகையின் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக, ஹன்வெல்ல மற்றும் அதன் கீழ் பகுதிகளில் தற்போது அதிக வெள்ளப்பெருக்கு நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால் அதனை பார்வையிட செல்லும் பயணங்களை தவிர்க்குமாறு நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஹன்வெல்ல அளவீட்டு நிலையத்தின் நீர்மட்டம் 9.78 மீட்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பாரிய வெள்ள நிலைமைக்கு அருகில் உள்ளது என்று நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
களனி ஆற்றுப் படுகையின் நீர்மட்டம்
களனி ஆற்றுப் படுகையின் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் மேலாண்மை பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, நாகலகம் வீதிகளில் உள்ள அளவீட்டு அளவீடு 8.35 அடியாகக் காட்டப்பட்டுள்ளது. இது சமீபத்திய வரலாற்றில் மிக உயர்ந்த நீர் மட்டமாகும் என நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.
நீர்மட்டம் அதே மட்டத்தில் இருக்கும் எனவும் நீர் மட்டத்தில் எந்த அதிகரிப்பும் இருக்காது என்றும், களனி விகாரைக்கு அருகில் அமைந்துள்ள வெள்ள அணை தற்போது எதிர்பார்த்ததற்கமைய, அதிகபட்ச நீர் மட்டத்தை எட்டியுள்ளது எனவும் அவர் கூறினார்.
ஆபத்தான பகுதியை அண்டியுள்ள மக்கள் விடுக்கப்படும் எச்சரிக்கை அறிவித்தல்களை கவனமாக பின்பற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri
பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri