சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் செல்ல முயன்ற 45 பேர் கைது
சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல முயன்ற 45 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையின் இரண்டு ரோந்துப் படகுகள் தெற்கு மற்றும் மேற்குக் கடலில் வைத்து வௌ்ளிக்கிழமை இவர்களைக் கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிலங்கையின் கடற்பரப்பில் வைத்து 26 நபர்களுடன் ஆழ்கடல் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ட்ரோலர் படகொன்றை கடற்படையின் ரோந்துப் படகான கஜபாகு மடக்கிப்பிடித்துள்ளது.
அதே போன்று கடற்படையின் மற்றொரு ரோந்துப் படகான P-481 மேற்குக் கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது மோசமான நிலையில் இருந்த ட்ரோலர் படகொன்றில் பயணித்துக் கொண்டிருந்த 19 நபர்களைக் கைது செய்துள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
