83 வயதான தந்தையை தும்புத்தடியால் தாக்கிய 43 வயதான மகள் கைது
பேருவளை, பந்த நாகொட பிரதேசத்தில் 83 வயதான முதியவரை தும்புத்தடியால் தாக்கியதாகக் கூறப்படும் 43 வயதான பெண்ணை பேருவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
43 வயதான மகள், தனது 83 வயதான தந்தையை தும்புத்தடியால் தாக்கி கொடுமைப்படுத்தியதாக பேருவளை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, குறித்த பெண்ணின் வீட்டுக்குச் சென்ற பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான முதியவர், தனது மகள் வசிக்கும் வீட்டுக்குச் சென்ற போதே மகள் அவரை தாக்கியுள்ளார்.
இந்த முதியவருக்கு மேலும் மூன்று மகள்கள் இருக்கின்றனர். வீட்டின் உரிமை சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, மகள் தந்தையைத் தாக்கியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பெண் சில மணி நேரம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர், பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் பிறிதொரு தினத்தில் பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.