மன்னார் மாவட்டத்தில் 20 நாட்களில் 423 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்: வைத்தியர் ரி.வினோதன்
மன்னார் மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில் கடந்த 20 நாட்களில் 423 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட கோவிட் நிலவரம் தொடர்பாக இன்று (21) விடுத்துள்ள கோவிட் நிலவர அறிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம்(20) மேலும் புதிதாக 18 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நவம்பர் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை 423 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த வருடம் 2799 தொற்றாளர்களும், மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 2816 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் தற்போது வரை 25 கோவிட்
மரணங்கள் நிகழ்ந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.


Brain Teaser Maths: கணக்கு புலிகளுக்கே சவால் விட்ட புதிர்... உங்களால் தீர்க்க முடியுமா பாருங்கள்? Manithan
