சர்வதேச மனிதாபிமான சட்ட பயிற்சி பட்டறையில் பங்கேற்கவுள்ள 400 சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள்
சர்வதேச மனிதாபிமான சட்டம் (IHL) என்றும் அழைக்கப்படும் போர்ச் சட்டங்கள், இராணுவ நடவடிக்கையின்போது நடைமுறைப்படுத்தல் தொடர்பில் உயர்மட்ட பயிற்சிப்பட்டறையில் இலங்கைப் படையினர் உட்பட்ட 400 சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.
சுமார் 90க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து இராணுவ அதிகாரிகள், அடுத்த மூன்று வார காலப்பகுதியில் இடம்பெறும் இந்தப் பயிற்சிப்பட்டறையில் பங்கேற்கவுள்ளனர்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் (ICRC) இந்தப்பட்டறை நடத்தப்படவுள்ளது. கூட்டு இராணுவ நடவடிக்கைகள் மற்றும் போர்க்கள நடத்தை மீதான தாக்கங்கள் என்பவை தொடர்பில் இந்த பயிற்சிப்பட்டறை கவனம் செலுத்தவுள்ளது.
பங்கேற்பாளர்கள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் ICRC ஆல் உருவாக்கப்பட்ட புதிய காணொளி உருவகப்படுத்துதலைப் பயன்படுத்துவார்கள். இது அதிகாரிகள் மற்றும் வீரர்களை நிஜ வாழ்க்கையைப் போன்ற காட்சிகளில் காட்டும்.
அங்கு இராணுவ நோக்கங்கள் பொதுமக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் அபாயத்திற்கு எதிராகச் சமநிலைப்படுத்தப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்படும்.
இந்தநிலையில் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் 4ஆம் திகதி வரை
நடைபெறவுள்ள ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான செயலமர்வில் இலங்கையின் 6
சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.

இந்த ராசியில் பிறந்தவங்க இறக்கும் வரை பணக்காரர்களாக இருப்பார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

இந்த வாரம் சரிகமப சீசன் 5 நிகழ்ச்சியில் ஸ்பெஷல் கெஸ்ட்.. குடும்பத்துடன் வந்த பிரபலம், வீடியோ Cineulagam
