ஆறு நாட்களில் இலங்கை வந்துள்ள நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்
மார்ச் மாதத்தின் கடந்த ஆறு நாட்களில் மாத்திரம் 40,877 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும், ரஷ்யாவில் இருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
இதன்படி, ரஸ்யாவில் இருந்து 50,800 பேரும், இந்தியாவில் இருந்து 5,602 பேரும் ஜேர்மனியில் இருந்து 4,110 பேரும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இதேவேளை கடந்த மாதத்தில் மாத்திரம் 218,350 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |