வவுனியாவில் 4 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
வவுனியாவில் 4 பேருக்கு கோவிட் தொற்று நேற்றிரவு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
வவுனியாவில் பரவலாக மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் முடிவுகள் சில இரவு வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் நான்கு பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் வவுனியா - மாமடு பகுதியில் இருவருக்கும், சாலம்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், செட்டிகுளத்தில் ஒருவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து கோவிட் தொற்றுக்கு இலக்கானவர்களை சிகிச்சை மையத்திற்கு அனுப்புவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவர்களுடன் தொடர்புடைய நபர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையிலும் சுகாதார பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.