போதைப்பொருள் மற்றும் கஞ்சா செடிகளுடன் இரு பெண்கள் உட்பட 4 பேர் கைது(Photo)
காத்தான்குடி மற்றும் ஏறாவூர் ஆகிய இரு பொலிஸ் பிரிவுகளில் 3 சம்பவங்களில் ஐஸ் போதைப்பொருள், ஹெரோயின் மற்றும் கஞ்சா செடியுடன் இரு பெண்கள் உட்பட 4 பேரை கைது செய்துள்ளதாக அந்தந்த பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (26.10.2022) இடம்பெற்றுள்ளது.
மாவட்ட குற்ற விசாரணை பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமையவே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கிணற்று பகுதியில் கஞ்சா செடி வளர்ப்பு
சம்பவதினமான நேற்று மாலை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள புன்னைக்குடா பகுதியில் அமைந்துள்ள இரு வீடுகளை முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது வீடுகளில் உள்ள கிணற்று பகுதியில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த இரு பெண்களை கைது செய்ததுடன் இரு கஞ்சா செடிகளையும் மீட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து ஏறாவூர் பகுதியில் ஜஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவரை ஆயிரம் மில்லிக்கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் கைது செய்து ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மூன்று சம்பவங்கள்
இதேவேளை காத்தான்குடி பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் 80 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று இரவு ஒருவரை கைது செய்துள்ளனர்.
இதேவேளை வேறு 3 சம்பங்களில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் நீதிமன்றில்
முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
